புத்தாண்டில் நமது பயணம்!
அன்பு நண்பர்களே, தோழர்களே!
வணக்கம். 2010-ஆம் ஆண்டு நமக்கு சவால்களையும், நம்பிக்கைகளையும் ஒரே நேரத்தில் தந்து அவற்றை நாம் எப்படி சந்தித்தோம் என்பதைக்கண்டு, 2011-க்கு வழி தந்து விடை பெற்றிருக்கிறது.
சஞ்சிகையைப் பொறுத்தவரை சுதந்திரம், சமாதானம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகியவற்றுக்கான தனது போராட்டப்பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், உலகளாவிய பார்வையுடன் இந்தப் பயணத்தில் நண்பர்கள், தோழர்களையும் அரவணைத்து அழைத்துச்செல்லவும் இந்தப் புத்தாண்டில் சபதமேற்கிறது.
"பாரதி பிடித்த தேர்வடமும் நடு வீதி கிடக்கிறது-அதைப்
பற்றி இழுத்திட ஊர் கூடித் தவிக்கிறது.
நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள்!
நாம் நடந்தால் தேர் நடக்கும்-அன்றேல்
வெயில் மழையில் கிடக்கும்!" என்பது கவிஞர் பரினாமனின்
அறைகூவல் மட்டுமல்ல, எச்சரிக்கையும் கூட!
கவி வாக்குக்கு செவிசாய்த்துப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்போமாக!
Friday, December 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment