Tuesday, April 22, 2014

பல்லாண்டு பல்லாண்டு – 5

-->
பல்லாண்டு பல்லாண்டு – 5
முதல் சொற்பொழிவு
பி.ச.குப்புசாமி


  நாங்கள் பாதை தெரியுது பார்படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தோம். அதுபற்றிய மேலும் சில விவரங்களை ஜெயகாந்தன் கூறினார். விருப்பமில்லாமலேயே அதில் ஒரு காட்சியில் அவர் கலெக்டராகநடிக்வைக்கப்பட்டதாகவும், படத்தின்நீளத்தைக் குறைக்க வேண்டும் என்கிற பிரச்னை வந்தபோது, தான் நடித்தகாட்சிகளையே முதலில் நீக்கிவிடுமாறு அவர் கூறி விட்டதையெல்லாம் தெரிந்து கொண்டோம்.
          அவருக்குப் பிடித்த சில விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம். மிகச் சிறுவயதில் அவர் பி.யு.சின்னப்பாவின்ரசிகராகஇருந்திருக்கிறார். சிதம்பரம் ஜெயராமனின் குரல் அவருக்குப் பிடித்தமானது.
          பாரதியின் பாடல்களை வேறு குரல்களில்கேட்டிருந்த எங்களுக்கு, அவற்றை அவர் பாடியபோது அதுவரை அனுபவித்திராத அற்புதமாக இருந்தது. பாடலின்பாவத்தை அவர் குரலும் முகமும்அழகாகப்பிரதிபலித்தன.
          பிறகு எவ்வாறோ படுத்து உறங்கினோம்.
          வெங்களாபுரம், நகரின்சூழ்நிலையிலிருந்துஒதுங்கியிருந்தது. அதன் அருகில், திருப்பத்தூரின் பெரிய ஏரி கோடி போனால் நீர் ஓடுகிற ஒரு சிறிய ஆறும் இருந்தது. காலைப்பொழுது அதன் கரையிலும் மரங்களின் அடியிலும்கழிந்தது. ஜெயகாந்தன்வருகையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் நகரிலிருந்துஅவ்வப்பொழுது வந்து அவரைப் பார்த்துச் சென்றனர். நாங்கள் அதுவரை அறிந்திராத சுவையான சம்பாஷணைக்கலையில் இரண்டு நாட்களாகத்தோய்ந்திருந்தோம்.
          ஞாயிற்றுக்கிழமை காலை, திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி தியேட்டரில் பாரதி விழா! அதற்கான ஏற்பாடுகளை எங்கள் நண்பரும்செயலூக்கம் மிக்க வருமான வேங்கடாசலம் போன்றவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். நண்பர் வையவனும் நானும் ஜெயகாந்தனுக்குத் துணையாக இருப்பதற்காக அந்த வேலைகளிலிருந்துவிலக்குப்பெற்றிருந்தோம்.
          ஜெயகாந்தனோடு, நண்பர் வையவன்தான்பிரதானமாகப்பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்குத்தான் அதற்கான விஷய ஞானம் இருந்தது. ஒரு பையனான நான் பெரும்பாலும் பார்த்தும் கேட்டும்ரசித்துக்கொண்டிருந்தேன்.
          பாரதி விழாவில் ஜெயகாந்தன், பாரதிதாசனைப் பற்றியும் நிறையப் பேசினார். நாங்கள் கேட்ட அவரது முதல் சொற்பொழிவு அதுதான். மேடையில் ஆவசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசுவதை இதற்கு முன்பு தோழர் ஜீவானந்தத்திடம் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர் பேச்சை விடவும்ஜெயகாந்தனின் பேச்சு நன்றாக இருந்ததாக நான் நினைத்தேன். இந்த அபிப்ராயம் ஜீவாவைக்குறைவுபடுத்துவதாகாது! ஜீவாவை மட்டும் அல்லாமல், தமிழில்மேடையேறிப் பேசும் வேறு யார் பேச்சை நினைத்துப் பார்த்தாலும், ஜெயகாந்தனின் பேச்சு தனித்துவம் மிக்கதாயிருந்தது.
          அவரது சொற்பொழிவு, யோசித்து யோசித்துப் பேசுவது போலவும் ஏதோ ஒப்பிப்பது போலவும் இல்லாமல் சிருஷ்டியின்கணங்கள்தெறித்துத்தெறித்துச் செல்லும் திறன் கொண்ட ஒரு தொடராயிருந்தது.
          அன்று நாங்கள் ஜெயகாந்தனோடு ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்குச் சென்று ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். முன் வரிசையில் ஜெயகாந்தனோடு நண்பர்கள் வேங்கடாசலம், வையவன், மாணிக்கம், தேழர்கிருஷ்ணசாமி ஆகியோர் அமர்ந்தும், பின் வரிசையில் நான், தண்டபாணி, பூபதி ஆகியோர் நின்றவாறும்போஸ்கொடுத்தோம்.  அந்தப் போட்டோ எடுக்கப்டும்போது ஒரு சிறு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.
          ஜெயகாந்தன்வேஷ்டியோடு இருந்தார். அவரது இரு கால்களுக்கும் இடையில் அது மடிந்து தவழ்ந்து வீழ்ந்திருந்தது. போட்டோகிராபர் அதைச் சரியாக இழுத்து விடுமாறு தனது தொழில் ரீதியானதோர்உத்தரவைப் போட்டார். ஜெயகாந்தனுக்கு முகம் மாறிற்று. கண்டிப்பான குரலில், “அது அப்படித்தான் இருக்கும்!  நீர் எடும்!என்று கூற, போட்டோகிராபர் பேசாமலாகிவிட்டார். அந்தப் படத்தில்ஜெயகாந்தனின் வேஷ்டி மிக அழகாகத்தான்பதிவாகியிருந்தது. போட்டோ கிராபர் சொன்ன மாதிரி செய்திருந்தால் ஏதோ டேராவைஇழுத்துக் கட்டியது போல் இருந்திருக்கும். இந்தப் போட்டோ இன்றளவும் என் நண்பர்களிடம் இருக்கிறது.
          இந்த சம்பவத்தில்எங்களுக்குப்பாரதியார் நினைவுக்கு வந்தார். அவர் ஒரு போட்டோவில், போட்டோகிராபர் சொன்னார் என்பதற்காகத் தன் கையில் இருந்த கோலைத்தாழ்த்திப்பிடிக்கச்சம்மதியாமல், விநோதமாகக் கொஞ்சம் உயர்த்திப்பிடித்துக்கொண்டிருப்பார்.
          மூன்று நாட்கள் திருப்பத்தூரில் தங்கியிருந்து, பாரதி விழாவில் பேசுகிற கடமையைமுடித்துவிட்டு, ஞாயிறன்று இரவு அவர் சென்னைக்கு அதே பாசஞ்சர்ரயிலில்புறப்பட்டுப் போனார்.
          அந்த மூன்று நாட்களும் ஏதோ மந்திரிக்கப்பட்ட நாட்கள் போல மாறிவிட்டிருந்தன.
          அவரை வழியனுப்ப நாங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்குச்சென்றோம். ரயில் வருவதற்கு முன்பாக, திறந்தவெளி பிளாட்பாரத்தின்சிமெண்டுப்பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
          அப்போது அங்கே ஒரு சம்பாணிப் பிச்சைக்காரன் வந்தான். ஒரு சிறு பலகைக்குச் சக்கரங்கள் அமைத்து, அந்தப் பீடத்தின் மீது உட்கார்ந்து உருட்டிக் கொண்டு வந்தான். அவனுக்கு ஒரு பத்துப் பைசா (1960ல்) கொடுக்குமாறுஜெயகாந்தன் கூறினார். நண்பர்களில் ஒருவர் அதைக்கொடுக்கவே, அந்தப் பிச்சைக்காரனுக்கு ஏக சந்தோஷமாகி விட்டது. கிளுகிளுத்தவாறே ஏதோ பாடிக்கொண்டு தனது சிறுதேரைஉருட்டிக் கொண்டு சென்றான்.
          “ஒரு பத்துப் பை
சா ஓர் ஆத்மாவுக்கு இவ்வளவு சந்தோஷம் கொடுத்தா
, அதை ஏன் தரக் கூடாது?” என்று ஜெயகாந்தன் சொன்னார். சென்னையில் பச்சையப்பன் கல்லூரி பஸ் ஸ்டாப்பில் எங்களை நச்சரித்தபிச்சசைக்காரனும் என் நினைவுக்கு வந்தான்.
          திருப்த்தூரில் நாங்கள் அவருக்குச் செய்த உபசாரமெல்லாம் மிகவும் எளிமையானவை. அந்த இடத்துக்கு இந்த இடத்துக்கு என்று தெருவெல்லாம் அவரை நடக்க வைத்துத்தான் அழைத்துச் சென்றோம். ஒரு பொருட்டில்லாதமனிதரை எல்லாம், அவர்கள் எதிர்ப்பட்டுவிட்டார்களே என்பதற்காக அவருக்கு அறிமுகம் செய்து அவரை ஆயாசப்டுத்தினோம். எந்த சங்கடமும் காட்டிக் கொள்ளாமல் அவர் எல்லாவற்றையும், ராஜீயச் சுற்றுலா வந்த ஒரு மன்னனைப் போல ஏற்றுக்கொண்டார்.
          அந்தப் பாசஞ்சர்ரயிலுக்குஷோரனூர்பாசஞ்சர் என்று பெயர். அப்பொழுதெல்லாம்ரயிலில் மூன்று வகுப்புகள் இருந்தன. நாங்கள் அவருக்கு ஓர் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்திருந்தோம்.
          ரயில் வந்ததும் ஏறி, வாயிற்படியிலேயே நின்று, ரயில் புறப்படும் வரை எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார். ரயில்  நகர்ந்து வேகமெடுக்கலாயிற்று. மறுபடியும் எப்பொழுது பார்ப்போம் என்கிற ஆவலாதியைத் தூண்டிவிட்டு அது தூரமாகச் சென்று மறைந்தது. அவரைச் சென்னை சென்றுதான் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று பேசியவாறுஸ்டேஷனிலிருந்து நாங்கள் வெளியே வந்தோம்.

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP