மண்டேலாவின் புரட்சிப் பயணம்
-->
தொடரட்டும்
மடிபாவின் பயணம்!
ஆலிவர்
ஷெர்மான்
(ஜமைக்கா
கவிஞர்)
இறைவா,
இந்த
சேதியைக் கொண்டுபோ
பக்குவமாய்
சேர்த்துவிடு
பழுத்த அந்த
சிங்கத்திடம்!
ஓ, அதன்
கண்களில்
இன்னும்
எத்தனை பிரகாசம்,
எத்துணை
ஜீவன்!
வியந்துபோகிறேன்
அதுகண்டு;
வீணே
கழித்துவிட்டேனோ என் காலம்?
என் வயதில்
அவரோ
எழுதி
முடித்துவிட்டார்
தன் தேசத்து
மகத்தான
எதிர்காலத்தின்
மறுபக்கம்!
காரக்கிருகத்தில்
கட்டுண்டு
கிடந்தார் பல்லாண்டு
காட்டு
விலங்கும்
கலங்கித்தான்
போயிருக்கும்
கடுஞ்சினத்தில்;
ஆனால்,
மருளவில்லை
மண்டேலா...
வாராது வந்த
மாமணி...
மடிபா எனும்
வீரச்சிங்கம்!
புகழ்மிகு
தந்தையே,
துவண்டு
கிடக்கும் பிடரி சிலிர்த்து
துள்ளி
எழுவீர் மீண்டும்!
தொடருட்டும்
உம் பயணம்
சவன்னா
கானகத்தில்!!
காற்றில்
மிதந்துவரும்-உங்கள்
கர்ஜனையின்
அலைகள்
கலக்கட்டும்
பூமித்தாயின் உள்ளத்தை
கதறித்
தன்னுள் அவள் அழைக்கும்போதும்
தளர்த்தவேண்டாம்
பீடுநடைதனை!
நீரல்லவோ
எமைத் தலைநிமிரச் செய்தீர்
மெய்யாகவே
நானும்கூட-அந்தப்
பெருமையின்
ஒரு துளிதான்!
கறுப்பு-வெளுப்பு
பேதம்
கடுகளவும்
பாராத மனிதக்கூட்டம்
நாங்கள்
காண்பதெல்லாம்
சிவப்பும்,
பொன்னிறமும்,
பச்சை வண்ணமும்தான்!
எங்கள்
இதயமெல்லாம்-அந்த
அரிமாவிடம்
அடைக்கலம்
அதனால்தான்
வேண்டுகிறேன்:
இறைவா,
இந்த சேதியை
தயைகூர்ந்து
ஏந்திச்
செல்க!
இயலாதென்றால்
ஒன்பது
பிறவிகொண்டு சோம்பித்திரியும்
அந்த
பொய்ப்பூனைகளின்
ஆயுளைப்
பறித்துவிடு;
ஏற்கட்டும்
அதனை
எம் கருணைச்
சிங்கம்!
எங்கள்
மடிபா, வீரத்திருமகனே,
காவியத்துக்
கதைபோல்
வழிமீது
வழிவைத்து
காத்திருப்போம்
உமக்காக!
உங்கள்
பயணம்
இன்னும்
முடியவில்லையன்றோ?
தமிழில்:
விதுரன்
0 கருத்துரைகள்:
Post a Comment