அன்புடையீர் வணக்கம். திரையில் தோன்றும் சஞ்சிகை நீண்ட நாள் கனவுகளின் நனவாக்கம்.
கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் எனப் பலதுறைகளையும் தழுவிய உலகச் செய்திகள், பிற மொழிப் படைப்புகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும்; தமிழில் முன்பே வெளி வந்திருந்தாலும் அவை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டப் பட வேண்டும் என்ற தணியாத தாகத்தின் வெளிப்பாடுதான் இந்த சிறிய முயற்சி.
முதலில் பரீட்சார்த்தமாகத் தாளில் வெளிவந்த சஞ்சிகை இப்போது உங்கள் கண் முன்னே திரையில்...
தோழர் ஜீவா காட்டிய பாரதி வழியே நம் வழி! நாம் செல்ல வேண்டிய பாதை நெடியது. ''முன்னே அடி எடுத்து வைப்பதற்கு ஓர் அடி நிலமும் போதிய வெளிச்சமும் இருந்தால் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்'' என்பார் மகாத்மா. நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடருவோம்! நல்லாதரவும், ஆசிகளும் வழங்குவீர்கள் என்கிற நம்பிக்கை என்றும் உண்டு.
0 கருத்துரைகள்:
Post a Comment